ஸ்ரீநகர், ஜன. 2 - ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச த்திலுள்ள அனைத்து இந்திய குடி மக்களுக்கும் இந்திய அரசிய லமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகள் வெட்கக் கேடான முறையில் தடுக்கப்படு கின்றன என்று முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு மெகபூபா முப்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும், அந்தக் கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கும் மெகபூபா முப்தி, “நாட்டில், குறிப்பாக ஜம்மு - காஷ்மீரில் நிலவும் கவலைக்கிட மான நிலை குறித்து மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய அவரது அன்பான தலையீட்டை எதிர்பார்க்கிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது: அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் வெட்கக்கேடான முறையில் தடுக்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, அரசியல், சமூக மற்றும் மத விஷயங்களில் அரசாங்கத்தின் வழியை கடைப்பிடிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமக்களுக்கு மட்டுமே இந்த அடிப்படை உரிமைகள் ஆடம்பரமாகவும், உரிமைகளாகவும் மாறியுள்ளன. 2019 முதல் ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை களும் தன்னிச்சையாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் இணையும் போது வழங்கப் பட்ட அரசியலமைப்பு உத்தரவாதங்கள் திடீரென மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமாக ரத்து செய்யப்பட்டுள் ளன. எனது மகள் மற்றும் எனது தாயாரின் பாஸ்போர்ட்டை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள், முக்கிய அரசியல் பணியா ளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நசுக்கும் இத்தகைய அடக்குமுறை தன்னிச்சையான முடிவுகளின் சுமையை தாங்கிக் கொண்டிருப்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.